Monday, April 16, 2012

பெரும் துயரம்

இன்று எங்கள் அப்பா இறைவனடி எய்தினார்.
என்றும் என்றும் மறக்கமுடியாத உங்கள் அன்பும் அரவனைப்பும் என்னால் எப்போதும் விலைகொடுத்தாலும் கிடைக்கத என் பாசமிகுந்த அப்பாவுக்காக நானும் எங்கள் குடும்பமும் ஆழந்த இந்த தருனத்தை வார்த்தகளால் சொல்ல முடியவில்லை.







9 comments:

ராமலக்ஷ்மி said...

என் ஆழ்ந்த அஞ்சலிகள் விஜி. தந்தையின் ஆன்மா சாந்தியடைவும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கிடைக்கவும் பிரார்த்தனைகள்.

Menaga Sathia said...

ஆழ்ந்த இரங்கல்கள்..தங்கள் தந்தையின் ஆத்மா சாந்தியடையவும்,தங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கிடைக்கவும் ப்ரார்த்தனைகள்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் வருத்தமான செய்தி தான்.

மனதை ஆறுதல் படுத்திக்கொள்ளுங்கள்.

அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

இமா க்றிஸ் said...

எனது ஆழ்ந்த அனுதாபங்கள் விஜி. உங்கள் தந்தையார் ஆன்ம இளைப்பாற்றிக்காக என் பிரார்த்தனைகள்.

சாருஸ்ரீராஜ் said...

எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள் விஜி.தந்தையின் ஆத்மா சாந்தியடைய எங்களுடைய பிராத்தனைகள்.

Mahi said...

ஆழ்ந்த அனுதாபங்கள் விஜிஅக்கா! அன்னாரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தனைகள்!

இழப்பைத் தாங்கும் வலிமையை உங்கள் அனைவருக்கும் ஆண்டவன் தரவேண்டும், அதற்கும் என் பிரார்த்தனைகள்!

chitrasundar5 said...

விஜி,

இன்றுதான் உங்க ப்ளாக்கிற்கு வந்தேன்.'பெரும் துயரம்'என்பதைப் பார்த்ததும் மிகவும் கஷ்டமாகிவிட்டது.உங்கள் அப்பாவின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று. அதைத்தாங்கும் சக்தியை இறைவன் உங்களுக்குக் கொடுக்க வேண்டும். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

இராஜராஜேஸ்வரி said...

தங்கள் தந்தையின் ஈடுசெய்ய முடியாத இழப்புக்கு ஆழ்ந்த இரங்கல்கள் !

தந்தையின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்..

அன்புடன் மலிக்கா said...

இன்றுதான் இச்செய்தி படித்தேன் விஜி. கவலைபடாதீரர்கள் அவர்களுக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.
இன்று அவர்கள் நாளை நாம் இதுதான் நமது இவ்வுலக வழ்க்கை..
வீட்டில் அனைவருக்கும் ஆறுதல் சொல்லுங்கள்..