Wednesday, April 28, 2010

சேப்பங்கிழங்கு வறுவல்




தேவையானவை



சேப்பங்கிழங்கு - 1/4 கிலோ

உப்பு - தேவைகேற்ப்ப

மிளகாய் தூள் - 1/2 தே.க

அரிசிமாவு - 1/4 தே.க

மஞ்சள் தூள் - 1/2 தே.க





தாளிக்க

---------


எண்ணெய் - 1/2 தே.க

கடுகு - 1/2 தே.க

உளுத்தம் பருப்பு - 1/2 தே.க

கறிவேப்பிலை - கொஞ்சம்

பெருங்காயத்தூள் - 1/4 தே.க


செய்முறை


கிழங்கை தோல் சீவி உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்கவும்.

குழையாமல் வேகவைக்கவும்.

நல்ல சூடு ஆறிய்பின் அதி சின்ன துண்டுகளாக்கி வைக்கவும்,

கடாயில் என்ணெய் விட்டு அதில் தாளிக்கயுள்ளதை தாளித்து

பிசிறிவைத்துள்ள துண்டுகளை போட்டு குறைந்த தீயில் வறுக்கவும்.

நல்ல கிரிஸ்பியான சேப்பங்கிழங்கு வறுவல் ரெடி.

குறிப்பு: கிழங்கை வேகவைக்காமல் சின்ன துண்டுகளாக்கி எண்ணெயில்

தாளித்த பின் இந்த கிழங்கு துண்டுகளை சேர்த்து வறுத்து எடுக்கலாம்.

நிறய்ய நேரம் தேவைப்படும்.



Friday, April 23, 2010

கீரை மசியல்


கீரை - 1 கட்டு

தாளிக்க

----------


எண்ணெய் - 2 தே.க

கடுகு - 1/2 தே.க

வற்றல் மிளகாய் - 1

உளுத்தம் பருப்பு - 1/2 தே.க


செய்முறை


கீரையை நல்ல பொடியாக அரிந்து கொஞ்சமாக தண்ணிர் சேர்த்து உப்பு சேர்த்து வேகவைக்கவும்.


தாளிக்கயுள்ளதை தாளித்து வெந்த கீரையில் சேர்த்து நல்ல கிளறி

எடுக்கவும்.


இது வற்றல் குழம்ப்,காரகுழம்பு, வெந்தயகுழம்பு, மிளகு குழம்பு எல்லாவற்றிற்க்கும் நல்ல காம்பினேஷமன்.


விரும்பினால் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்க்கலாம்.

Tuesday, April 20, 2010

வற்றல் குழம்பு


தேவையானவை
புளி - நெல்லிக்காய் அளவு
நல்லெண்னைய் - 2 தே.க
மஞ்சள் தூள் - 1/2 தே.க
சாம்பார் பொடி - 1 தே.க
மிளகாய் தூள் - 1/2 தே.க
உப்பு - தேவகேற்ப்ப

தாளிக்க

நல்லெண்னய் - 2 தே.க
வெந்தயம் - 1/4 தே.க
பெருங்காயம் - 1/4 தே.க
கடுகு - 1/2 தே.க
துவரம்பருப்பு - 1/2 தே.க
வற்றல் மிளாகாய் - 2
கறிவேப்பிலை - கொஞ்சம்
சுண்டைக்காய் வற்றல் - 1 தே.க

செய்முறை

புளியை நன்றாக கரைத்து கொள்ளவும்
கடாயில் எண்னெய் விட்டு தாளிக்கயுள்ளதை தாளிக்கவும்,
மணத்தக்காளி அல்லதுசுண்ண்டைக்காய் வற்றலை தனியாக
வறுத்து வைக்கவும்.
புளி கரைசல் விட்டு,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து நல்ல கொதிக்க விடவும்.நல்ல கொதித்ததும் அதில் மிளகாய் தூள், சாம்பார் தூள் சேர்த்து மேலும் கொஞ்சம் தன்னிர் சேர்த்து கொதிக்க வைக்க்வும்.
நல்லகெட்டியாக தொடங்கியதும் இறக்கி வறுத்த மனத்தக்காளி வற்றலை போட்டு இறக்கவும்.விரும்பிணால் ஒரு சின்ன துண்டு வெல்லம் சேர்க்கவும்.

இதற்க்கு கீரை மசியல், கீரை கூட்டு, சுட்ட அப்பளம், வடாம் பயத்தம் பருப்புசேர்த்த செள் செள் கூட்டு சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

Tuesday, April 13, 2010

போளி















எல்லோருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்






தேவையானவை

பூரனத்திற்க்கு

கடலை பருப்பு - 1கப்
சர்க்க்ரை - 3/4 கப்
ஏலத்தூள் - 1/2 தே.க

மேல் மாவு செய்ய

மைதா மாவு (ஆல் பர்பஸ் மாவு) - 1 கப்
உப்பு - 1/4 தே.க
கேசரி கலர் அல்ல்து மஞ்சள் தூள் - 1/2 தே.க
நல்லெண்னெட்ய் - 2 தே.க

நெய் - 2 தே.க
அரிசிமாவு - 1 தே.க

செய்முறை

கடலை பருப்பை குக்கரில் 1/4 கப் தண்ன்ரிர் விட்டு நல்ல மசிய வேகவைக்கவும்.

மசியவில்லை என்றால் மாஷாரால் மசிக்கவும், (மிக்ஸியில் அரைக்கவும்)
கடாயில் கொஞ்சம் நெய் விட்டு அரைத்த மாவுகலவையை, சர்க்க்ரை சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறவும்.
நன்றாக சுருண்டு வரும்போது எடுத்து ஆறவிடவும்.
சின்ன சின்ன உருணடைகளாக செய்யவும்.


மேல் மாவு தயாரிக்க மாவுடன் கொஞ்சம் தண்னிர்,நல்லெண்ய்,

உப்பு, கலர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.
அரைமணி நேரம் ஊறவிடவும்.

மாவில் கொஞ்சம் எடுத்து சின்ன உருண்டைகளாக எடுத்து சின்ன சப்பாத்தி போல் செய்து அதன் நடுவில் பூரணத்தை வைத்து மூடி அரிசிமாவை தொட்டு நல்ல சப்பாத்தி மோல் மெல்லியதாக இட்டு தோசை தவாவில்

மிதமான தீயில் வைத்து இரு புறமும் நெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

நல்ல கம கம போளி ரெடி.

இத்துடன் பால்பாயசம், சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.


குறிப்பு: வாழை இலையில் வைத்து இட்டு சுட்டால் நன்றாக இருக்கும்.


அவார்ட்ஸ்


ஜெய்லானி எனக்கு அன்பாக அளித்த வைர விருது. மிகவும் நல்ல பழககூடிய ஜெய்லானி அவர்களுக்கு நன்றி.







இந்த மாதம் அவார்ட் வழங்கும், பெறும் மாதமாக இருப்பதால் எனக்கும் எனதருமை தோழி ஸாதிகா அக்கா நல்ல மிக பெரிய வைரகிரிடம் கொடுத்து என்னையும் கௌரவித்திருக்கிறாங்க. நன்றி ஸாதிகா அக்கா. பரிசுகள் எனறால் அதன் மதிப்பும், மரியாதையும் வெகு பல. அதிலும் எனக்கு கிடைத்திருப்பதை நான் மிக மிக சந்தோஷமா இருக்கும். நன்றி..

Monday, April 12, 2010

பிஸிபேளாபாத்


தேவையானவை


பச்சரிசி - 1 கப்

துவரம் பருப்ப்பு - 1/2 கப்

மஞ்சள் தூள் - 1/2 தே.க

பெருங்காயத்தூள் - 1/2 தே.க

புளி - நெல்லிகாய் அளவு

நெய் - 1/2 தே.க



காயக்றிகள்


கேரட், பட்டாணி,பீன்ஸ்,உருளை,செளசெள,கத்தரிக்காய்,

சின்ன வெங்காயம்,தக்காளி, (அரிந்தது 1 கப்)


தாளிக்க

-------------

எண்ணெய் - 1 தே.க


முந்திரி பருப்பு - 4(நெய்யில் வறுத்தது)

வேர்க்கடலை - 1/2 தே.க

கடுகு - 1/2 தே.க

கறிவேப்பிலை - கொஞ்சம்,


மசாலா பௌடர்

-----------------------


கடலை பருப்பு - 1 தே.க

தனியா - 1/2 தே.க

வெந்தயம் - 1/4 தே.க

மிளகாய வற்றல் - 4

பட்டை - 1 துண்டு

க்ராம்பு - 2

தேங்காய் துருவியது - 1 தே.க


கடாயில் நல்ல சிவக்க வறுத்து பொடிக்கவும்.


குக்கரில் அரிசி,பருப்பு, உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து நல்ல மசிய வேகவைக்கவும்.


பான் அல்லது கடாயில் எண்னெய் விட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து நல்ல வதக்கவும். தக்காளி,காயகறிகள்,உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

ஐந்து தே.க மசாலா பௌடர் சேர்த்து நன்றாக வதக்கி,

புளி கரைசல் 2 கப் தண்னிர் சேர்த்து கொதிக்க விடவும்.

கொதித்து கெட்டியானதும் வேகவைத்த அரிசி,பருப்பு

சேர்த்து மேலும் அரை கப் தண்னிர் சேர்த்து கொதிக்க விடவும்.

நன்றாக கெட்டியானதும் மேலே கொஞ்சம் நெய் விட்டு

தாளித்து கொட்டவும்.

மேலே வறுத்த வேர்க்க்டலை, முந்திரி போட்டு கலந்து

பரிமாறவும்.


சிப்ஸ், அப்பளம், வடாம் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

ஹெவி லன்ஞ்.

இந்த சாதம் கர்நாடகவில் ப்ரசித்தமானது.





Saturday, April 3, 2010

கமன் டோக்ளா





தேவையானவை

பச்சரிசி - 1
உளுந்து - ½ கப்
தயிர் - ½ கப்
பச்சை மிளகாய் – 2
பேக்கிங் சோட - ½ தே.க
உப்பு - தேவைகேற்ப்ப

தாளிக்க

எண்ணெய் - 1 தே.க
சீரகம் - ½ தே.க
கொத்தமல்லி இலை – கொஞ்சம்

செய்முறை

அரிசி, பருப்பு இரண்டையும் நன்றாக கழுவி
1 மணிநேரம் ஊறவிட்டு நல்ல தண்ணிரி இல்லாமல்
வடிகட்டி ரவை பதத்தில் பொடிக்கவும்.

மாவை தயிர்+தண்னிர்+உப்பு சேர்த்து நன்றாக கலந்து
3 மணிநேரம் புளிக்க விடவும்.

சோடா,அரிந்த பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக கலந்து
குக்கர் பாத்திரத்தில் எண்ணெய் தேய்த்து அதில் விட்டு
பத்து நிமிடம் ஆவியில் வைக்கவும்.

வெளியில் எடுத்து மேல் தாளித்து கொத்தமல்லி இலை தூவி
துண்டுகளாக வெட்டி சட்னியோட பரிமாறவும்.

இதில் விரும்பினால் காய்கறிகள்,தேங்காய் துருவல் பொடியாக அரிந்து போட்டு செய்யலாம்.


குறிப்பு: அவசரத்திற்க்கு இட்லி ரவையிலும் செய்யலாம்.
பாஸ்மதி அரிசி, புழுங்கல் அரிசியிலும் செய்யலாம்.
கடலை மாவு, ஒட்ஸ்,கேழ்வரகு மாவு, வெள்ளை ரவை போன்றவற்றிலும்
செய்யலாம்,

Thursday, April 1, 2010

க்ரிஸ்ப்பி பாகற்காய்




தேவையானவை

பாகற்க்காய் - 2
அரிசி மாவு - 1 தே.க
கடலைமாவு – 1 தே.க
மிளகாய் தூள் – ½ தே.க
மஞ்சள் தூள் - ½ தே.க
உப்பு - தேவைகேற்ப்ப
எண்ணெய் - பொரிப்பதற்க்கு


செய்முறை

பாகற்க்காயை நன்றாக தண்ணிரில் கழுவி ¼ இன்ஞ் கனத்தில் வட்ட வடிவமாக கட் செய்யவும்.
தண்ணிரில் உப்பு,மஞ்சள் தூள் கலந்து அதில் கட் செய்த
பாகற்க்காயை போட்டு வைக்கவும்.
ஐந்து நிமிடத்திற்க்கு பின் எடுத்து ஒரு பேப்பர் டவலில்
பரத்தி வைக்கவும்.
ஒரு தட்டில் மாவு,மிளகாய்தூள்,உப்பு, எல்லாம் சேர்த்து நன்றாக
கலந்து வைக்கவும், தண்ணிர் சேர்க்க வேண்டாம். உலர்பொடியாக இருக்கவேண்டும்.
உலந்த பாகற்காயை மாவு கலவையில் பிசிறி எண்னெயில்
பொன்நிறமாக பொரித்தெடுக்கவும்.
பாகற்காயின் கசப்பே தெரியாமல் எல்லாம் காலியாகிவிடும்.
இதை தயிர்சாதம், சாம்பார் சாதம், சேர்த்து சாப்பிடலாம்.
இதே போல் வெண்டை, காலிப்ஃளவர், வாழைக்காய்,சேனை
போன்றவற்றிலும் செய்யலாம்.