Wednesday, March 24, 2010

பானகம்,நீர்மோர்,கோசமல்லி

இன்று ஸ்ரீ ராம நவமி. கடவுள் ஸ்ரீ ராமர் பிறந்த தினம்.
தசாவதரத்தில் 7 வது அவதாரமாக அவதரித்தவ்ர்.
இந்த ஸ்லோகத்தை முன்று முறை ஜெபிக்கவும்.

Sri Rama Rama Ramethi Rame Rame Manorame
Sahasranama Tathulyam Rama Nama Varaname




ஸ்ரீராம நவமிக்கு கடவுக்கு நிவேதன்ம் செய்யகூடியது.

நீர்மோர்,பானகம்,கோசமல்லி.





பானகம்

வெல்லம் - ½ கப்
சுக்கு தூள் – ¼ தேக
ஏலத்தூள் - ¼ தே.க
லெமன் ஜூஸ்- ½ தே.க

செமுறை
வெல்லத்தை 1 கப் தண்ணிரில் கரைக்கவும்.
நல்ல கல் போக வடிகட்டவும்.
வடிகட்டிய வெல்ல தண்ணிரில் ஏலத்துள்
சுக்கு பொடி,லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக கலந்ஹ்டு
பரிமாறவும்.

நீர்மோர்

தயிர் - 1 கப்
இஞ்ஞிதுருவல் – ¼ தே.க
பச்சைமிளகாஉ - 1
பெருங்காயத்தூள் – ¼ தே.க
உப்பு - தேவைகேற்ப்ப
லெமன் ஜூஸ் – ¼ தே.க

தயிரை முக்கால் கப் தண்ணிர் சேர்த்து
கடைந்து வைக்கவும்.
பச்சைமிளகாயை பொடியாக் அரியவும்
இஞ்ஞிதுருவல், பச்சை மிள்காய்,உப்பு,
பெருங்காயத்தூள்,லெமன் ஜூஸ் கடைந்த
மோர் எல்லவற்றையும் ஒரு பாத்திரத்தில்
ஊற்றி நன்றாக கலந்து மேலே
கொத்தமல்லி இலை பொடியாக அரிந்து
போட்டு பரிமாறவும்.

கோசமல்லி

வெள்ளரிக்காய் பொடியாக அரிந்தது - ½ கப்
மாங்காய் பொடியாக அரிந்தது - ¼ கப்
பச்சை மிளகாய் பொடியாக அரிந்தது – 1
பச்சை பருப்பு - ¼ தே.க
உப்பு - தேவைகேற்ப்ப

செய்முறை


பச்சை பருப்பை ஊறவைக்கவும்.
மற்ற எல்லா பொருட்களையும் ஒன்றாக
கலந்து வைத்து பரிமாறவும்.

இந்த மூன்றும் ராமருக்கு நைவேத்தியம் செய்வது
வழக்கம்.

2 comments:

kavisiva said...

விஜி தேடிப்பிடிச்சு உங்க வீட்டுக்கு வந்துட்டேன் :). வந்த உடனேயே பசி எடுக்க ஆரம்பிச்சிடுச்சு. எனக்கு புடிச்ச ஐட்டம் எல்லாம்(குறிப்பா எரிசேரி,கீரைவடை) பார்த்து ஜொள்ளறேன். இப்போதைக்கு பானகம் குடிச்சு திருப்தி பட்டுக்கறேன்.கந்த சஷ்டி விரதத்தை முடிக்க இந்த பானகம்தான் செய்வோம்.

Sailaja Damodaran said...

U too have a great blog. All the best..........